Thursday, 15 September 2011

காராள வம்சம்


பண்டைக் காலத்தில் பெரும் திரளாக வாழ்ந்த கொங்குநாடு காராள வம்ச வெள்ளாளர் பெருமக்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் பின்னாளில் தங்கள் கலாச்சாரம், பண்பாடும் தனித்தன்மை, பாரம்பரியம் கட்டுக்கோப்பு ஆகியவற்றைப் பேணிக் காக்கும் வகையில் காணி கண்டு குலம் வகுத்து தங்கள் இனம் பெருக வழி வகுத்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் முன்னிலையில் மதுக்கரை அருள்மிகு செள்ளண்டியம்மனை ஆதி குல தெய்வமாகக் கொண்டு 60 காணிகள் கண்டு 160 குலங்களை வகுத்தனர். அவற்றில், ஆண்வாரிசு இல்லாமையாலும், குழந்தை பாக்கியம் இல்லாததாலும், வறுமையால் வேறு இடம் பெயர்ந்து மற்றவருடன் கலந்து விட்டதாலும் சில குலங்கள் மறைந்து போயிற்று. அழகுமலை ஒதாலக்குரவஞ்சி என்னும் மனிதரின் காலத்தில் காராள வம்சத்தின் குலங்களைப் பாடியபோது 146 குலங்களை மட்டுமே குறிப்பிட்டனர். அவர் காலாத்தில் 14 குலங்கள் மறைந்து போயிற்று. தற்போது மேற் கூரயவற்றின் காரணமாக இன்னும் சில குலங்கள் மறைந்து வெறும் 75 குலங்கள் மட்டுமே உள்ளன. மற்ற குலங்கள் அரிச்சுவடிகளே தெரியாமல் போயிற்று. இப்போது குல தெய்வ கோயில்கள் கொண்டுள்ள குலங்கள் பின்வருமாறு:
1)      அழகு குலம்
2)      அந்துவன் குலம்
3)      ஆந்தை குலம்
4)      ஆவன் குலம்
5)      ஆதி குலம்
6)      ஆட குலம்
7)      ஈஞ்சன் குலம்
8)      எண்ணைக் குலம்
9)      ஒழுக்கர் குலம்
10)   ஒதாளன் குலம்
11)   கணக்கன் குலம்
12)   கணவாளர் குலம்
13)   கண்ணன் குலம்
14)   கண்ணந்தை குலம்
15)   கல்லி குலம்
16)   காரி குலம்
17)   காடை குலம்
18)   கீரை குலம்
19)   குழாயர் குலம்
20)   கூறை குலம்
21)   கோவேந்தர் குலம்
22)   சாத்தந்தை குலம்
23)   செங்கண்ணன் குலம்
24)   செங்குண்ணி குலம்
25)   செம்பன் குலம்
26)   செம்பூத்தான் குலம்
27)   செல்லன் குலம்
28)   செவ்வாயர் குலம்
29)   செவ்வந்தி குலம்
30)   சேரன் குலம்
31)   சேரலன் குலம்
32)   சேட குலம்
33)   தனஞ்செயன் குலம்
34)   தமிஞ்சி குலம்
35)   தூரன் குலம்
36)   தேவேந்திர குலம்
37)   தோடை குலம்
38)   நீலன் குலம்
39)   நீருண்ணியர் குலம்
40)   பனங்காடன் குலம்
41)   பண்ணன் குலம்
42)   பதறியர் குலம்
43)   பவளர் குலம்
44)   பயிரன் குலம்
45)   பதுமன் குலம்
46)   பணையர் குலம்
47)   பாண்டியன் குலம்
48)   பில்லன் குலம்
49)   பிரழாந்தை குலம்
50)   பூசன் குலம்
51)   பூச்சந்தி குலம்
52)   பூந்தை குலம்
53)   பெரியன் குலம்
54)   பெருங்குடி குலம்
55)   பொன்னன் குலம்
56)   பொடியன் குலம்
57)   பொருள்தந்த குலம்
58)   மணியன் குலம்
59)   மயிலர் குலம்
60)   மழுவன் குலம்
61)   மாட குலம்
62)   முத்தன் குலம்
63)   முழுக்காதன் குலம்
64)   முல்லை குலம்
65)   மூலன் குலம்
66)   மேதி குலம்
67)   வண்ணக்கன் குலம்
68)   வாணர் குலம்
69)   விளையன் குலம்
70)   வில்லி குலம்
71)   விழியன் குலம்
72)   வெண்டுவன் குலம்
73)   வெள்ளம்பர் குலம்
74)   வெண்ணெய் குலம்
75)   வேந்தன் குலம்
இவையே தற்போது வாழ்ந்து வரும் குலங்கள் ஆகும்.

அக்காலத்தில் கொங்கு நாட்டுத் தலைவர்கள் வருடந்தோரும் ஒன்று கூடி நாட்டு நடப்பு முறைகளை கலந்து ஆராய்ந்து குறை இருப்பின் அவற்றை தீர்க்க வழி கண்டு, வேளாளர்களின் ஒழுங்கு முறையை காத்து கலப்பின்மை நடக்காமல் கட்டிக்காத்து குல தெய்வ வழிபாடு குறையற நடக்க வேளாளர்கள் சீரோடும் சிறப்போடும் வாழ வழி கண்டனர்.
அனைத்து நாடுகளுக்கு தலைமை நாட்டார் சபை, ஒவ்வொரு நாட்டிற்கும் தலைமை நாட்டுச் சபை (நாட்டாண்மை), ஒவ்வொரு நாட்டிலும் உள்ள காணிகளுக்கு தலைமை காணியாளர் சபை, ஒவ்வொரு காணிக்கும் உரிய ஊர்களுக்குத் தலைமை ஊர்சபை (கொத்துக்காரர்) என்று சீராக மக்களுக்கு நல்வழி காட்டி மக்களை பாதுகாத்தனர்.

இன்றளவும் கொங்கு காராள வம்சத்தினர் இதைப் பின்பற்றி நெறியோடு மக்களைப் பாதுகாத்து வருகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும், நல்லது கெட்டது எதுவென்றாலும், ஒன்று கூடி தங்கள் ஒற்றுமையை உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கொங்கு வேளாளர்களின் தலையாயப் பணியான விவசாயத்தை இன்றளவும் பின்பற்றி உலகிற்கு உணவு தருகிறார்கள்.கொங்கு இனம் என்றால் அது ஒற்றுமையையே குறிக்கும் வகையில் வாழும் காராள வம்சாதினரின் புகழ் என்றளவும் இவ்வுலகில் நிலைத்து நிற்கும்.

கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்!!!